Sunday, February 28, 2021

இந்தியா இந்தோனேஷியாவின் “PASSEX” என்ற கடற்படை பயிற்சி

 


  • இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் கடற்படை “PASSEX” என்ற பெயரில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி அரபி கடலில் நடைபெற்றது. இந்த பயிற்சி மூலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமை பலம் பெரும் என்று நம்பப்படுகிறது.
  • இந்தியாவின் கப்பலான “INS Talwar” மற்றும் இந்தோனேஷியாவின் “KRI Bung Tomo” இந்த பயிற்சியில் ஈடுபட்டது.

Labels:

2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது!

 


2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி! 

2019ஆம் ஆண்டிற்கான விருது பெறுவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறை:

நூல் ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன்,வைகைச்செல்வன், எழுத்தாளர் ஆவடிக்குமார், இசைக்கலைஞர்கள் குருசரண், அக்கரை சகோதரிகள், ஆச்சாள்புரம் சின்னதம்பி, திருநாகேஸ்வரம் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாடக நடிகர்கள் மா.வீ.முத்து, T. ராஜேந்திரன், பரதநாட்டிய ஆசிரியர்கள் முரளிதரன், சியாம் சுந்தர், வில்லிசைக்கலைஞர் எஸ்.பி.முத்துலெட்சுமி, தெம்மாங்கு பாடகர் தங்கவேலு ஆகியோரும் விருது பெறுகின்றனர்.

இசை நாடக நடிகர்கள் கிருஷ்ணப்பா, பி.எஸ்.முத்துக்கிருஷ்ணன், நடிகர் ராமராஜன், யோகிபாபு, இயக்குநர் லியாகத் அலிகான், நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி, இசையமைப்பாளர் தினா, பாடலாசிரியர் காமகோடியன், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, பின்னணி பாடகர்கள் அனந்த், சுஜாதா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட 59 கலைஞர்களின் பெயர்களும் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டிற்கான புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது :

புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகளுக்கு, நடிகை சரோஜா தேவி, திரைப்பட பாடகி பி.சுசீலா, நாட்டிய கலைஞர் அம்பிகா காமேஷ்வர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய விருதுகளில், சீனி விஸ்வநாதனுக்கு பாரதி விருதும், இசைத்தமிழ் கலைஞர் எஸ். ராஜேஸ்வரிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும், நாட்டிய கலைஞர் அலர்மேல் வள்ளிக்கு பாலசரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டிற்கான  மூத்த கலைஞர்களுக்கான கலைமாமணி விருது:

நாடக நடிகர் வீ.மூர்த்தி, திரைப்பட நடிகை பசி சத்யா உள்ளிட்ட 5 பேருக்கு வாழும் மூத்த கலைமாமணி விருதாளர்களுக்கான பொற்கிழி வழங்கப்படுகிறது.

 

2020-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறுவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறை:

2020-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, சமய சொற்பொழிவாளர் கே.கல்யாணராமன், கதையாசிரியர் செந்தூர் பாண்டியன், நூல் ஆசிரியர் பனப்பாக்கம் சுகுமார், எழுத்தாளர் அரசு பரமேசுவரன், இசைக்கலைஞர்கள் ஜான் மோகன், முருகபூபதி, திருப்பனந்தாள் எஸ்.மாரிமுத்து, டி.ஆர். சுந்தரேசன் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

பரதநாட்டிய கலைஞர்கள் ஜனார்தனன், கவிதா சார்லஸ், கரகாட்டக் கலைஞர் பழனியம்மாள், மரக்கால் ஆட்டக்கலைஞர் கோவிந்தராஜ், இசை நாடக நடிகர்கள் வி.எம்.முருகப்பா, கே.ஆர். எம். இந்திரா உள்ளிட்டோர் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திரைப்பட நடிகர்கள் சிவகார்த்திக்கேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், மதுமிதா, இசையமைப்பாளர் டி. இமான், பாடலாசிரியர் காதல் மதி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வசனகர்த்தா வி. பிரபாகர், சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் மற்றும் நடிகரான ரவி மரியா உள்ளிட்ட 65 கலைஞர்களின் பெயர்களும் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது :

புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகளுக்கு, நடிகை சௌகார் ஜானகி, இசைக்கலைஞர் ஜமுனா ராணி, நாட்டியக் கலைஞர் பார்வதி ரவி கண்டசாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய விருதுகளில், சுகி சிவத்திற்கு பாரதி விருதும், இசைத்தமிழ் கலைஞர் வாணி ஜெயராமிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும், நாட்டிய கலைஞர் சந்திரா தண்டாயுதபாணிக்கு பாலசரஸ்வதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான  மூத்த கலைஞர்களுக்கான கலைமாமணி விருது:

வில்லிசை கலைஞர் பி.எஸ்.கோமதி, நாடக நடிகை எஸ்.என். பார்வதி உள்ளிட்ட 4 பேருக்கு வாழும் மூத்த கலைமாமணி விருதாளர்களுக்கான பொற்கிழி வழங்கப்படுகிறது.

Labels:

சென்னையில் தனது உற்பத்தி ஆலையை நிறுவுகிறது அமேசான்

  


சர்வதேச ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான், தனது எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம் சென்னையில் தொடங்க இருக்கும் இந்த உற்பத்தி ஆலை, இந்தியாவில் அந்நிறுவனம் தொடங்க உள்ள முதல் உற்பத்தி ஆலையாகும்.

இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் அமேசான் நிறுவனம் சென்னையில் தயாரிக்கும் பொருட்கள் சந்தைக்கு வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “சென்னையில், இந்தியாவின் தனது முதல் உற்பத்தி ஆலையை அமேசான் நிறுவனம் தொடங்க இருக்கிறது. இந்த தகவலை அமேசான் நிறுவனத்தின் இந்திய தலைவர் அமித் அகர்வால் மூலம் தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், அமேசான் நிறுவனம் சென்னையில் அமைக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலை ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் முக்கிய அடையாளமாக இருக்கும் என்றும் ரவிசங்கர் பிரசாத் பெருமிதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Labels:

புதுச்சேரியில் 7ஆவது முறையாக அமலானது ஜனாதிபதி ஆட்சி!

  


புதுச்சேரி அரசியலைப் பொறுத்தவரையில் அங்கே முதல்வர் நாற்காலி இதுவரை சுழல் நாற்காலியாகவே அமைந்துள்ளது. அதற்கு நாராயணசாமியும் விதிவிலக்கல்ல. ரெங்கசாமியைத் தவிர்த்து யாரும் 5 ஆண்டு காலம் முதல்வர் நாற்காலியை அலங்கரித்ததில்லை.

கூடவே மற்றொன்றையும் புலப்படுத்துகிறது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி செயல்பட்டதை விட ஜனாதிபதி ஆட்சியே நிறைய முறை அமலில் இருந்திருக்கிறது. இதுவரை அங்கு 6 முறை ஜனாதிபதி ஆட்சி அமைந்திருக்கிறது. 1968இல் தொடங்கிய இந்தப் பாரம்பரியம் 1974இல் இரு முறை, 1978,1980 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருமுறையும் 1990ஆம் ஆண்டில் முடிவுற்றது. தற்போது 31 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சட்டப்பேரவையில் நாராயணசாமி அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்தார். 

இதையடுத்து பெரும்பான்மையாக இருக்கும் அதிமுக-என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரைத்தார். மத்திய அமைச்சரவை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த நேற்று ஒப்புதல் அளித்தது. இச்சூழலில் தற்போது இருந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை தான் ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

Labels:

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி- 51!

 


 

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் தற்பொழுது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தற்பொழுது விண்ணில் ஏவப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-51 -ல் உள்ள சேட் செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. அதேபோல் பகவத்கீதையின் வாசகம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த ராக்கெட்டில் அமேசான் காட்டை குறித்து ஆராய்வது தொடர்பான 'அமேசானியா-1' என்ற பிரேசில் செயற்கைகோள், பாதுகாப்பு படையினர் பயன்பாட்டுக்காக இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா என்ற செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்கள் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் முதல் கட்ட செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

637 கிலோ எடை கொண்ட பிரேசிலின் அமேசானியா-1 செயற்கைகோளின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். அதேபோல் இந்த ராக்கெட்டில் சென்னை, கோவை கல்லூரி மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

Labels:

செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய

 

 
 செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய காணொலியை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றிய ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது விண்வெளி பயணத்தை தொடங்கிய பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த வியாழன் அன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இந்த நிலையில்,பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாயில் இறங்கிய காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.

இத்துடன் பெர்சவரன்ஸ் விண்கலம் பல்வேறு கோணங்களில் செவ்வாய் நிலப்பரப்பை எடுத்த பல்வேறு புகைப்படங்களையும் நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும் அங்கிருந்த மண் மற்றும் கற்களை பூமிக்கு கொண்டு வரவும் பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பப்பட்டது. இது அடுத்த 2 ஆண்டுகள் செவ்வாய் கோளை சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. அமெரிக்காவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் ஸ்வாதி மோகனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Labels:

உலகிலேயே முதன்முதலாக படம் பிடிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்

  

 
உலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் ஒன்றைக் கண்டார். அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள எம்பரர் பென்குயின் ஒன்றும் உலா வருவதைக் கண்ட அவர் இரண்டையும் புகைப்படம் எடுத்துள்ளார்.ஏனைய உயிரினங்களில் அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதைப் போல முதன்முதலாக பென்குயினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Labels: