Sunday, February 28, 2021

புதுச்சேரியில் 7ஆவது முறையாக அமலானது ஜனாதிபதி ஆட்சி!

  


புதுச்சேரி அரசியலைப் பொறுத்தவரையில் அங்கே முதல்வர் நாற்காலி இதுவரை சுழல் நாற்காலியாகவே அமைந்துள்ளது. அதற்கு நாராயணசாமியும் விதிவிலக்கல்ல. ரெங்கசாமியைத் தவிர்த்து யாரும் 5 ஆண்டு காலம் முதல்வர் நாற்காலியை அலங்கரித்ததில்லை.

கூடவே மற்றொன்றையும் புலப்படுத்துகிறது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி செயல்பட்டதை விட ஜனாதிபதி ஆட்சியே நிறைய முறை அமலில் இருந்திருக்கிறது. இதுவரை அங்கு 6 முறை ஜனாதிபதி ஆட்சி அமைந்திருக்கிறது. 1968இல் தொடங்கிய இந்தப் பாரம்பரியம் 1974இல் இரு முறை, 1978,1980 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருமுறையும் 1990ஆம் ஆண்டில் முடிவுற்றது. தற்போது 31 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சட்டப்பேரவையில் நாராயணசாமி அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்தார். 

இதையடுத்து பெரும்பான்மையாக இருக்கும் அதிமுக-என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரைத்தார். மத்திய அமைச்சரவை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த நேற்று ஒப்புதல் அளித்தது. இச்சூழலில் தற்போது இருந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை தான் ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

Labels:

58 ஆண்டுகளுக்குப் பிறகு நாகாலாந்து சட்டப்பேரவையில் பாடப்பட்ட தேசிய கீதம்

 


கடந்த 1963-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தற்போது வரைநாகாலாந்து சட்டப் பேரவையில் தேசிய கீதம் பாடப்பட்ட தில்லை. இந்நிலையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவையில் முதல் முறையாக தற்போது தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

இதனை பாதுகாப்பு ஆலோசகர் நிதின் ஏ. கோகலே தனதுட்விட்டர் பதவில் பகிர்ந்துள்ளார். தேசிய கீதத்தை ஒலிக்கவிட்டு அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நாகாலாந்து சட்டப்பேரவை செயலர் அந்தோணி கூறும்போது, “பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு முன்னரும், பின்னரும் தேசிய கீதம் பாடப்படும். பெரும்பாலான மாநிலங்களில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நாகாலாந்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தேசியகீதம் இதுவரை பாடப்பட்டதில்லை. இதுவே முதல்முறையாகும். தேசிய கீதம் பாடப்படுவதற்கான முயற்சியை பேரவை சபாநாயகர் ஷரிங்கைன் லாங்குமெர் எடுத்தார்” என்றார்.



Labels:

Tuesday, February 23, 2021

விஜயநகரா மாவட்டம் கர்நாடகாவில் உதயம்

 



விஜயநகரை, கர்நாடகாவின், 31வது மாவட்டமாக அறிவித்து, மாநில அரசு, நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

பல்லாரி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, விஜயநகரா என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என, 2020, டிச., 14 ல், கர்நாடக அரசு அறிவித்தது.புதிய மாவட்டத்தில், ஹொஸ்போட், கூட்லிகி, ஹகரிபொம்மனஹள்ளி, கொட்டூரு, ஹூவினஹடகலி, ஹரப்பனஹள்ளி ஆகிய, ஆறு தாலுகாக்கள் சேர்ப்பதற்கு கருத்துகள், ஆட்சேபனைகள் கோரப்பட்டன.அனைத்தையும் பரிசீலித்த பின்,, மாநிலத்தின், 31 வது மாவட்டமாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. ஹொஸ்பேட், மாவட்ட தலைநகரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா துறை அமைச்சர் ஆனந்த் சிங்கின் தீவிர முயற்சியால், விஜயநகரா புதிய மாவட்டம் உதயமானது.

Labels:

இந்தியாவின் முதல் e-காபினெட்: ஹிமாச்சல பிரதேசம்

 


காகிதமில்லா செயல்பாட்டை ஊக்குவிக்க ஹிமாச்சல் பிரதேச அரசு e-காபினெட்  எனும் முன்னெடுப்பை அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் கடந்த பிப்ரவரி 5, 2021 ஆம் தேதி துவக்கி வைத்தார்.

இதற்காக e-காபினெட் எனும் செயலியை அம்மாநில தகவல் தொழில்நுட்ப துறை உருவாக்கியுள்ளது.

இனி காபினெட்டின் அனைத்து செயல்பாடுகளும் e-காபினெட் எனும் செயலி மூலம் மேற்கொள்ள அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.


Labels:

Swatch-Delhi : மின்சார வாகனங்களை ஊக்குவிக்க




மின்சார வாகனங்களின் பயன்பாட்டை  ஊக்குவிக்க டெல்லி முதல்வர் துவக்கியுள்ள சுவச்- டெல்லி எனும் பிரச்சார முன்னெடுப்பை துவக்கியுள்ளார்.

இதன் மூலம் 2024 ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை 25% வரை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

Labels: ,

உ.பி.-யின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு!

 

குடியரசு தின அணிவகுப்பில் உத்தர பிரதேசத்தின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

டெல்லியில் இந்தாண்டு நடைப்பெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசுகளை மத்திய இளைஞர் விவகாரம் மற்றும்
விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று வழங்கினார்.

டெல்லியில் நடைப்பெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில், 32 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. அதில் 17 அலங்கார ஊர்திகள், மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேசங்களைச் சேர்ந்தவை. 9 அலங்கார ஊர்திகள் பலதுறை அமைச்சகங்கள் மற்றும் துணை ராணுவப்படையைச் சேர்ந்தவை. 5 ஊர்திகள் பாதுகாப்பு படைகளைச்
சேர்ந்தவை. இந்த அலங்கார ஊர்திகள், நாட்டின் கலாச்சாரம், பொருளாதார வளர்ச்சி, ராணுவத்தின் வலிமை ஆகியவற்றை வெளிப்படுத்தின.

அயோத்தி கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் மாதிரி வடிவமைப்பைக்கொண்ட, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த
அலங்கார ஊர்தி, சிறந்த அலங்கார ஊர்தியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை வென்றது. இரண்டாவது இடத்தை திரிபுரா அலங்கார ஊர்தி பிடித்தது. இது தற்சார்பு
இந்தியா இலக்கை அடைய சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மூங்கில் மற்றும் பிரம்பு தயாரிப்பு பொருட்கள் மற்றும் திரிபுரா கலாசாரத்தை வெளிப்படுத்தின.

சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கான விருதை டெல்லி மவுன்ட் அபு பள்ளி மற்றும் வித்ய பாரதி பள்ளி மாணவர்களுக்கு கிரண் ரிஜிஜூ வழங்கினார். இந்த குழந்தைகள்,
தற்சார்பு இந்தியாவுக்கான தொலைநோக்கை வெளிப்படுத்தினர்.

Labels: , ,

Sunday, January 24, 2021

உத்தரகண்ட் ;ஒரு நாள் முதல்வராக ஷிருஷ்டி!!

 

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி பதவியேற்கவுள்ளார்..!

தேசிய பெண் குழந்தை தினத்தை (National Girl's Day) முன்னிட்டு, ஹரித்வாரைச் சேர்ந்த இளம் பெண் ஷிருஷ்டி கோஸ்வாமி (Srishti Goswami), BJP ஆட்சி செய்யும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக இன்று செயல்பட உள்ளார். அவர் டேராடூனில் நடைபெறும் குழந்தை சட்டசபை அமர்வில் பங்கேற்பார். இந்தியாவின் பல பகுதிகளில், சாதனை புரியும் சிறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு நாள் கலெக்டர், MP போன்ற பதவிகளில் உட்காரவைக்கப்பட்டு கௌரவிப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். ஆனால், ஒரு நாள் முதல்வராக யாரும் இதுவரை இருந்ததில்லை. 

இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று, உத்தரகண்டில் இளம் பெண் ஷிருஷ்டி கோஸ்வாமிக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. ஹரித்வார் மாவட்டத்தின் (Haridwar district) தவுலத்பூர் கிராமத்தில் வசிக்கும் ஷிருஷ்டி கோஸ்வாமி B.Sc Agriculture படித்து வருகிறார். அவரது தந்தை கிராமத்தில் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார். அவரது தாயார் அங்கன்வாடி தொழிலாளி. 19 வயதான அவர் 2018-ல் உத்தரகண்ட் சிறுவர்கள் சட்டசபையின் முதல்வராக இருந்தார். மேலும், 2019 ஆம் ஆண்டில், பெண்கள் சர்வதேச தலைமைத்துவத்தில் பங்கேற்க ஷிருஷ்டி கோஸ்வாமி  தாய்லாந்து சென்றார். 


இது குறித்து சிருஷ்டி கூறுகையில்., இதை என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்நாளில் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை பெற்றுள்ளேன். இளைஞர்கள் மிகச் சிறந்த முறையில் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது செயல்பாடுகள் இருக்கும் என்றார். இந்த ஒரு நாளில் அவர் அடல் ஆயுஷ்மான் திட்டம் (Atal Ayushman Scheme), ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இவர் உத்தரகண்ட் மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக இருந்து வருகிறார்.


Labels: ,

Tuesday, December 8, 2020

கர்நாடகா சட்டசபையில் பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது


 

கர்நாடக சட்டசபையில் கடும் அமளிக்கு மத்தியில் பசுவதை தடுப்பு மற்றும் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பிரபு சவுகான் தாக்கல் செய்தார். இது தாக்கல் செய்யப்பட்ட உடனேயே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் ஜே.டி (எஸ்) மாநிலத் தலைவர் எச்.கே.குமார்சாமி தலைமையிலான ஜனதா தளம் (எஸ்) சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வணிக ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த மசோதா (Bill) விவாதிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்தே காகேரி கடுமையாக மறுத்தார்.

ஆளும் பாஜக (BJP) இந்த மசோதாவை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடாமல் நிறைவேற்றுவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா இது அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.  இதனால் இன்றைய சட்டமன்ற கூட்டத்திலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்ய இது வழி வகுத்தது என அவர் குற்றம் சாட்டினார். ஜெ.டி.(எஸ்) கட்சியும் இந்த முடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்தது.

முன்னதாக கர்நாடகாவில் லவ் ஜிஹாத் (Love Jihad) மற்றும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயண் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைப் பற்றிய பேச்சு துவங்கியவுடனேயே எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்து பெரும் அமளியில் ஈடுபட்டனர்.

கர்நாடக (Karnataka) பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதா -2020 என அழைக்கப்படும் இந்த மசோதா மாநிலத்தில் பசுக்களை படுகொலை செய்வதற்கு மொத்த தடையும், கடத்தல், சட்டவிரோத போக்குவரத்து, பசுக்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனையும் கோருகிறது என்று பாஜக வட்டாரங்கள் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.-யிடம் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளின் பாதுகாப்பிற்காக கோஷாலா அல்லது கால்நடை கொட்டகைகளை அமைப்பதற்கும் இது ஏற்பாடு செய்கிறது. இங்கு சோதனை நடத்த போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால்நடைகளைப் பாதுகாப்பவர்களுக்கும் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.

கர்நாடக சட்டசபையில் (Karnataka Assembly) கடும் அமளி நிலவியதால், மசோதா எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. பின்னர் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

 

Labels:

Sunday, December 6, 2020

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ₹.50,000 ஊக்கத்தொகை


 

முதல்வரின் பட்டதாரி பெண் குழந்தை ஊக்கத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்த பணம் நேரடியாக அந்த மாணவிகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படும்.

பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன் பெண் குழந்தைகளுக்காக பீகார் அரசு (Bihar Govt) சிறப்பு முயற்சியை எடுத்துள்ளது. இந்த புதிய முடிவின் படி, இப்போது பீகாரில் பட்டம் பெறும் மாணவிகளுக்கு (Mukhyamantri Kanya Utthan Yojana) அரசாங்கம் தரப்பில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் முழுமையாக வழங்கப்படும். இதில், நல்ல விஷயம் என்னவென்றால், முதலமைச்சரின் பட்டதாரி பெண் குழந்தை ஊக்கத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்த பணம் நேரடியாக அந்த மாணவிகளின் கணக்குகளுக்கு மாற்றப்படும்.

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும்

2020 சட்டமன்றத் தேர்தலின் (Bihar Assembly Polls 2020) போது, ​​முதலமைச்சர் நிதீஷ்குமார் (CM Nitish Kumar) தனது அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு (Graduate Girls) தலா ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியிருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் இப்போது தயாராகி வருகிறது.

ஊக்கப் பணத்தை அனுப்பும் திட்டம் தயாராக உள்ளது

முக்கிய மந்திரி பட்டப்படிப்பு பாலிகா புரோட்சஹான் யோஜனாவின் கீழ் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மகள்களின் வங்கிக் கணக்கிற்கு ஊக்கத் தொகையை அனுப்புவதற்கான திட்டத்தை பீகார் அரசின் கல்வித் துறை தயாரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜாக்ரானின் செய்தியின்படி, இது நிதித்துறை ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. பின்னர் அமைச்சரவையில் இருந்து ஒப்புதல் எடுக்கப்பட்டு பின்னர் அது நடைமுறைக்கு வரும். முகமந்திரி பட்டதாரி பெண் குழந்தை ஊக்கத் திட்டத்தின் கீழ், அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்ற மகள்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

சுமார் 1.50 லட்சம் மகள்கள் பயனடைவார்கள்

முதலமைச்சரின் பட்டதாரி பெண் ஊக்கத் திட்டத்தின் கீழ் இந்த தொகை அதிகரிப்பது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற சுமார் 1.50 லட்சம் மகள்களுக்கு பயனளிக்கும் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில், அத்தகைய மகள்களுக்கு 25-25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கடந்த ஆண்டு 1.4 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களில் 84,344 மகள்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பத்தில் பல்கலைக்கழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதில் ஏதேனும் தவறு இருப்பதாக அந்த அதிகாரி கூறுகிறார். திருத்தத்திற்குப் பிறகு, விண்ணப்பங்கள் மீண்டும் வரும்போது, ​​மீதமுள்ள மாணவர்களுக்கும் பணம் அனுப்பப்படும்.

 

Labels: ,