Tuesday, February 23, 2021

விஜயநகரா மாவட்டம் கர்நாடகாவில் உதயம்

 



விஜயநகரை, கர்நாடகாவின், 31வது மாவட்டமாக அறிவித்து, மாநில அரசு, நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

பல்லாரி மாவட்டத்தை இரண்டாக பிரித்து, விஜயநகரா என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என, 2020, டிச., 14 ல், கர்நாடக அரசு அறிவித்தது.புதிய மாவட்டத்தில், ஹொஸ்போட், கூட்லிகி, ஹகரிபொம்மனஹள்ளி, கொட்டூரு, ஹூவினஹடகலி, ஹரப்பனஹள்ளி ஆகிய, ஆறு தாலுகாக்கள் சேர்ப்பதற்கு கருத்துகள், ஆட்சேபனைகள் கோரப்பட்டன.அனைத்தையும் பரிசீலித்த பின்,, மாநிலத்தின், 31 வது மாவட்டமாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. ஹொஸ்பேட், மாவட்ட தலைநகரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா துறை அமைச்சர் ஆனந்த் சிங்கின் தீவிர முயற்சியால், விஜயநகரா புதிய மாவட்டம் உதயமானது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home