Tuesday, February 23, 2021

இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவராக அஜய்சிங் மீண்டும் தேர்வு

 



இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் குருகிராமில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் கொரோனா பரவலால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன பார்வையாளர் யுரி ஜாய்ட்செவ் முன்னிலையில் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தொழிலதிபர் அஜய்சிங் 37-27 என்ற ஓட்டு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து நின்ற மராட்டியத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆஷிஷ் சிலாரை தோற்கடித்து மீண்டும் தலைவர் பதவியை கைப்பற்றினார்.

பொதுச்செயலாளராக அசாமைச் சேர்ந்த ஹேமந்த குமார் கலிதா தேர்வானார். பின்னர் பேட்டி அளித்த அளித்த அஜய்சிங், இந்தியாவில் பெண்கள் குத்துச்சண்டை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தள்ளிவைக்கப்பட்ட ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் நடத்தப்படும் என்றும் கூறினார்.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home