வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கியும், 93 சாதியினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடும், எஞ்சியுள்ள பிரிவினருக்கு 2.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியும் சட்டப்பேரவையில் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இதர பிரிவினருக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வழிவகை செய்கிறது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது, சாதிகள் குறித்த விவரம் சேகரிப்பு பணிக்கு பின் 6 மாதம் கழித்து மாற்றியமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 7 சதவீதம் உள்ஒதுக்கீட்டைப் பெறவுள்ள சீர்மரபினர் பிரவில் 68 உட்பிரிவுகள் உள்ளன என்றார். தொடர்ந்து, மசோதா ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
Labels: Tamilnadu
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home