புதுச்சேரியின் 31ஆவது துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியி துணைநிலை ஆளுநராக இன்று பதவியேற்றார்.
குடியரசு தலைவரின் அறிவிப்பை தலைமை செயலர் படித்தார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அதனைத் தொடரந்து, ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். இந்த பதவி ஏற்பு விழா காலை 9.05 மணிக்கு துவங்கி 9.12 க்கு முடிவடைந்தது. பின்னர் காவல்துறையின் மரியாதையை ஏற்றார்.
இன்று பதவி ஏற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியின் 31ஆவது துணைநிலை ஆளுநர் ஆவர். 5 வது பெண் துணை நிலை ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Labels: Appoinment
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home